மிக மோசமான தாக்குதல்…நேரில் பார்த்தவர்கள் கூறியது என்ன?

தெற்கு காஷ்மீரில் இருக்கும் புல்வாமா பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 37 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 78 வண்டிகளில் சுமார் 2547 வீரர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். அதில் பெரும்பாலானவர்கள் விடுமுறையில் இருந்து மீண்டும் பணிக்கு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும்.

எங்கிருந்தோ வந்த கார் நேரடியாக அந்த பேருந்து மீது மோதியதில் பேருந்து சுக்குநூறாக வெடித்து சிதறியது. அப்பகுதியில், நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் “மிகப் பெரிய அதிர்வினை உணர்ந்ததாகவும் . மிக சத்தமாக இருந்ததாகவும் ,அமர்ந்திருந்த இடத்தில் இருந்து தூக்கி வீசப்படும் அளவிற்கு சக்தி வாய்ந்த தாக்குதலாக இது இருந்தது. என்றும் கூறினார்கள்.

பத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

அகமது தார் என்பவர் 350 கிலோ எடை கொண்ட வெடி பொருட்களுடன் தான் ஓட்டி வந்த ஸ்கார்பியோ காரை ராணுவ வீரர்கள் வந்த வாகனத்தில் மோத வைத்து தாக்குதல் நடத்தினார்.

ஜம்முவில் இருந்து நேற்று அதிகாலை 3:30 மணிக்கு இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீநகரை அடைய வெறும் 35 கி.மீ இருந்த நிலையில், மாலை 03:30 மணி அளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதல் நடைபெற்ற சில நிமிடங்களிலேயே தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு செய்தியாளர்கள் தடை செய்யப்பட்டனர். இணைய சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

Share This News

Related posts

Leave a Comment